கோவை: கேரளாவில் இருந்து லாரிகளில் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த ஓட்டுநர்களுக்கு நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து லாரிகளில் எடுத்து வந்த மருத்துவக் கழிவுகளை கோவை எட்டிமடை பகுதியில் கொட்டியதாக 24 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
இந்த லாரிகளை ஓட்டி வந்த 24 ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.