சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் ரயில், பேருந்துகள் மட்டும் அல்லாமல் விமான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முதல் சிறப்பு ரயில், சிறப்பு பேருந்துகள் என சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளியூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விமானம் மூலமாக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்ததை அடுத்து இன்றும் நாளையும் அனைத்து விமான சேவை நிறுவனங்களின் விமான டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.