காவிரி மேலாண்மை வாரியம் காலக்கெடுவுக்குள் அமைக்கப்பட வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:காவிரியில் கர்நாடக மாநில குடிநீருக்கு மட்டுமே நீர் இருப்பதாகவும், தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்துவிட்டு, இப்போது சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்கிறார்கள் எனவும், கர்நாடக முதல்வர் தெரிவித்திருப்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசு, மத்திய அரசை வலியுறுத்தியிருப்பது நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, மத்திய அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை காலக்கெடுவுக்குள் அமைத்திட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com