புதுச்சேரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மணக்குள விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ, அன்பழகன், பேராசிரியர் ராமதாஸ், தொகுதி செயலாளர் அன்பானந்தம், மாநில பொருளாளர் சுத்துக்கேனி பாஸ்கர், அவைத்தலைவர் பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி மற்றும் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு பூரண குணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.