வெள்ளப் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தனது கொளத்தூர் தொகுதியில் அவர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மழைக்காலம் வரும்போது சென்னை மீண்டும் நிச்சயம் ஒரு பெரிய ஆபத்தைச் சந்திக்கும்.
எனவே, மழைநீர் வடிகால்களைத் தூர் வாருவது, குடிநீர் வடிகால் மூலமாக என்னென்ன பணிகளைச் செய்ய முடியுமோ, அதையெல்லாம் மாநகராட்சி அதிகாரிகளும், குடிநீர் வடிகால் அதிகாரிகளும் செய்ய வேண்டும் என்றார்.
மு.க.ஸ்டாலினுடன் நாராயணசாமி சந்திப்பு: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்துப் பேசினார்.