திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த கமலா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2013ம் ஆண்டு நவம்பரில் திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த கமலா என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமரேசன் இன்று தீர்ப்பளித்தார்.
திருவாரூர் அருகே நடந்த இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மணிவேலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.