புது தில்லி: ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதித்தால், இதுவே ஒரு முன்னுதாரமாக ஆகிவிடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் செப்டம்பர் 18ம் தேதி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ராம்குமாரின் தந்தை பரமசிவம், பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
பிரேத பரிசோதனையின் போது அரசு மருத்துவர்கள் இருந்தால் அவர்கள் ஒருதலைபட்சமாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கெஹர், அருண் மிஸ்ரா, ராம்குமார் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதித்தால், இதுவே ஒரு முன்னுதாரமாக ஆகிவிடும்.
பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்கும் நடைமுறை தற்போது இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.