சென்னை: சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 29 பேர் இந்த ஆண்டுக்கான பருவத் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரிக்குள் நுழைந்த குற்றத்துக்காக கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள 64 மாணவர்களில் 29 பேர் இந்த ஆண்டு பருவத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த 29 பேருக்கும் வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.