தொப்பூர்: சேலம் மாவட்டம் தொப்பூர் பகுதியில் அரசுப் பேருந்தும் மணல் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேட்டுப்பிரிவு சாலையில் அரசுப் பேருந்து எதிரே வந்த மணல் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.