சேலத்தில் அரசுப் பேருந்து - மணல் லாரி மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் தொப்பூர் பகுதியில் அரசுப் பேருந்தும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சேலத்தில் அரசுப் பேருந்து - மணல் லாரி மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு


தொப்பூர்: சேலம் மாவட்டம் தொப்பூர் பகுதியில் அரசுப் பேருந்தும் மணல் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேட்டுப்பிரிவு சாலையில் அரசுப் பேருந்து எதிரே வந்த மணல் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com