காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முன்கூட்டியே திறக்கப்பட்டதாக சரணாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்குள் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.