சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். அவர் அத்தொகுதியில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை நேரில் சென்று சந்தித்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னுடைய ஆதரவைத்த தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர்வதற்கே டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். நாளை முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன்.இந்த ஆட்சியை எந்த சூழ்நிலையிலும் யாரும் புகுந்து கலைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஆதரவு நிலைப்பாடு.
இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.