சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன் ஆகிய இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தங்கள் அணிக்குரிய இரட்டை மின்கம்பம் சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக மதுசூதனனுக்கும், தடை செய்யப்பட்டுள்ள அதிமுக என்ற பெயரை பயணப்படுத்தியமைக்காக அதிமுக அம்மா அணியின் டி.டி.வி.தினகரனுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இருவரும் நாளை மாலை 4 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.