மது பிரியர்களுக்கு வருத்தமான செய்தி: 5 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் காரணமாக ஆட்சியர் அறிவிப்பின்படி, சென்னை மாவட்டத்தில், ஐந்து நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் காரணமாக ஆட்சியர் அறிவிப்பின்படி, சென்னை மாவட்டத்தில், ஐந்து நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.

ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும் வன்முறை இல்லாமலும் நடத்த வேண்டும் என அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.  

இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் வெளியிட்ட அறிகையில் கூறியிருப்பதாவது:

''ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி, காலை, 10 மணி முதல், 12-ஆம் தேதி நள்ளிரவு வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 15-ஆம் தேதி அன்றும், சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, 9-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

இந்த உத்தரவை மீறி மது விற்றால், சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அறிவித்துள்ளார்.

இதுவரை எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத வகையில் முதல்முறையாக வீடியோ கான்ஃபரன்சிங் முறையில், இந்தியத் தேர்தல் ஆணையம், மாநிலத்தின் தலைமைச் செயலாளர் தலைமையிலான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com