ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு ஆணையத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிரடியான முடிவு குறித்து அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறுகையில்,
இந்த தேர்தல் நியாயமான முறையில் கையாளப்படவில்லை. தொடர்ந்து பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் வந்து கொண்டே இருந்தது. அதுமட்டுமல்லாமல், வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் தலையிட்டு இந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன். மேலும், இந்தியா மீண்டும் ஒரு ஜனநாயக நாடு என்பதை நிரூபித்துவிட்டது என்று பாராட்டியுள்ளார்.