சென்னை: விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக வரும் ஏப்ரல் 16 அன்று திமுக அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
தமிழகம் முழுவதும் நிலவி வரும் விவசாயிகள் பிரச்சினை தொடார்பாக திமுக அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. வரும் 16-ஆம் தேதி ஞாயிறு அன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடக்க உள்ளது.
இது தொடர்பாக அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கு தனித்னியான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உ ள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.