விவசாயிகள் பிரச்சினை: ஏப்ரல் 16-ல் திமுக அனைத்துக்கட்சிக் கூட்டம்! 

விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக வரும் ஏப்ரல் 16 அன்று திமுக அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக ...
விவசாயிகள் பிரச்சினை: ஏப்ரல் 16-ல் திமுக அனைத்துக்கட்சிக் கூட்டம்! 

சென்னை: விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக வரும் ஏப்ரல் 16 அன்று திமுக அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

தமிழகம் முழுவதும் நிலவி வரும் விவசாயிகள் பிரச்சினை தொடார்பாக திமுக அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. வரும் 16-ஆம் தேதி ஞாயிறு அன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடக்க உள்ளது.

இது தொடர்பாக அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கு தனித்னியான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட  உ ள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com