சென்னை: தமிழகத்திலேயே நூறு சதவீதம் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடவானூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்த்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அத்துடன் இது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது தமிழகத்திலேயே நூறு சதவீதம் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடவானூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு நடைபெற்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியினை ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் வெங்கடேசன் மற்றும் சுதாவிடம் இந்த தகவலை தெரிவித்து அதற்கான சான்றையும் அளித்தனர்.