சேலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை காண திரண்ட ரசிகர்களால் தள்ளுமுள்ளு

சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷை காண திரண்ட ரசிகர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை காண திரண்ட ரசிகர்களால் தள்ளுமுள்ளு

சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷை காண திரண்ட ரசிகர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் நகைக்கடை (ஏ.வி.ஆர். எலைட் ஷோரூம்) திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது, அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் நகைக் கடை முன் திரண்டனர்.
சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் சாலையை ஆக்கிரமித்திருந்த ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு கீர்த்தி சுரேஷை காண சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டி விட்டனர். அப்போது போலீஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்களால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 5 சாலை செல்லும் சாலையில் சுமார் 1 மணி நேரம் வாகனப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
ஏற்கெனவே புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 5 சாலை செல்லும் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், நடிகை கீர்த்தி சுரேஷை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரண்டதில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com