ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மழை

ஈரோடு, ராசிபுரம், சேலம், கம்பம், கொடைக்கானல், ஒக்கேனக்கல், நீலகிரி குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் லேசான மழை பெய்து
ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மழை

ஈரோடு: ஈரோடு, ராசிபுரம், சேலம், கம்பம், கொடைக்கானல், ஒக்கேனக்கல், நீலகிரி குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் பலத்த காற்றில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் அவதிப்பட்ட பொது மக்கள், மழை காரணமாக சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர், சிவகாசி சுற்றுவட்டாரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com