7-ஆவது முறையாக தேசிய விருது: வைரமுத்துவைப் பார்த்து கருணாநிதி ஆனந்தக் கண்ணீர்

7-ஆவது முறையாகத் தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி ஆனந்தக் கண்ணீர் உதிர்த்ததாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்
தேசிய அளவில் 7 -ஆவது முறையாக விருது பெற்றுள்ள கவிஞர் வைரமுத்துவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
தேசிய அளவில் 7 -ஆவது முறையாக விருது பெற்றுள்ள கவிஞர் வைரமுத்துவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

7-ஆவது முறையாகத் தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி ஆனந்தக் கண்ணீர் உதிர்த்ததாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திரைப்படப் பாடலுக்காக 7-ஆவது முறையாகத் தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் வைரமுத்துவை பெசன்ட்நகரில் உள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்திய அளவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரும் சாதிக்க முடியாத வகையில் வைரமுத்துவுக்கு 7-ஆவது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. இது அவருக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழுக்கு கிடைத்திருக்கும் பெருமையாகும். எந்த விருது பெற்றாலும் கருணாநிதியிடம்தான் அவர் முதலில் கூறுவார். இப்போது 7-ஆவது முறையாக தேசிய விருது பெற்றபோதும் உடல்நலம் குன்றி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியைச் சந்தித்து, இந்த செய்தியை சொன்னார். கருணாநிதி சிரித்துக்கொண்டே ஆனந்தக் கண்ணீர் உதிர்த்தார். வைரமுத்துவுக்கு திமுக சார்பில் வாழ்த்துகள் என்றார். ஸ்டாலினுடன் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் சென்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசரும் வைரமுத்துவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com