சென்னை: என்னிடம் பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிக்செல்ல முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில் டிடிவி தினகரன் இன்று நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்.
இந்நிலையில், டிடிவி தினகரன் வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிச்செல்ல முடியும் என்று கூறினார்.