சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமியை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா இன்று மதியம் சந்தித்துப் பேசினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தியும் உடன் இருந்தார்.
தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில், முதல்வருடன் சென்னை காவல் ஆணையர் கரண் சின்ஹாவும், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தியும் திடீரென சந்தித்துப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.