தொண்டர்களின் நலனுக்காக பேச்சுவார்த்தைக்கு நாங்களும் குழு அமைப்போம்: கே.பி. முனுசாமி

பழனிசாமி தலைமையிலான அணியினர் பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்ததை அடுத்து, நாங்களும் குழு அமைப்போம் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார்.
தொண்டர்களின் நலனுக்காக பேச்சுவார்த்தைக்கு நாங்களும் குழு அமைப்போம்: கே.பி. முனுசாமி


சென்னை: பழனிசாமி தலைமையிலான அணியினர் பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்ததை அடுத்து, நாங்களும் குழு அமைப்போம் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, அதிமுக தொண்டர்கள் மற்றும் நாட்டின் நலன் கருதியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அமைச்சர்கள் தரப்பில் குழு அமைத்ததை அடுத்து, நாங்களும் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைப்போம் என்றும் அவர் கூறினார்.

குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இன்று மாலைக்குள் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com