மத்திய அரசின் உத்தரவு எதிரொலியாக புதுவை மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்கள் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகள் அகற்றப்பட்டன.
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
மத்திய அரசு உத்தரவின் பேரில் நானும், பேரவைத் தலைவர், துணைத்தலைவர் அமைச்சர்கள், மற்றும் அரசு கொறடா, முதல்வர் நாடாளுமன்றசெயலர், தில்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோர் தங்களது வாகனத்தில் இருந்த சிவப்பு நிற சூழல் விளக்கை அகற்றி விட்டோம். மத்திய அரசு முடிவை பின்பற்ற வேண்டியது, மாநில அரசின் கடமை. அதை நாங்கள் செய்து உள்ளோம் என்றார்.
மேலும் வாரியத்தலைவர்கள் காரில் உள்ள சிவப்பு விளக்குகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் நாராயணசாமி.
ஏற்கெனவே ஆளுநர் கிரண்பேடி தனது வாகனத்தில் சிவப்பு சுழல் விளக்கை அகற்றியது குறிப்பிடத்தக்கது.