திருவண்ணாமலை: சத்யராஜ் யாரிடமும் மன்னிப்பு கேட்கத்தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாகுபலி- 2 திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஒரு அமைப்பு கூறுவதை ஒட்டுமொத்த திரை உலகமும், கர்நாடக அரசும் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார்.
கன்னட அமைப்பின் இந்தப் போராட்டம் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கு எதிரானது என்றும், நடிகர் சத்யராஜ் யாரிடமும் மன்னிப்புக் கேட்க தேவையில்லை என்றும் சீமான் தெரிவித்தார்.