இரட்டை இலைக்காக தன்னிடம் உள்ள துறைகளையும் இழக்க தயார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

இரட்டை இலைக்காக தன்னிடம் உள்ள நிதித்துறை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இழக்கவும் தயார் என்று நிதி
இரட்டை இலைக்காக தன்னிடம் உள்ள துறைகளையும் இழக்க தயார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: இரட்டை இலைக்காக தன்னிடம் உள்ள நிதித்துறை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இழக்கவும் தயார் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த இரு அணிகளின் பேச்சுவார்த்தை நாளை திங்கள்கிழமை அல்லது மறுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியானது.

பேச்சுவார்த்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இருதரப்பில் இருந்தும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், நாளை திங்கள்கிழமை காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுக (புரட்சித்தலைவி அம்மா), அதிமுக (அம்மா) ஆகிய இரு அணிகளை பேச்சுவார்த்தை நடத்தி இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்பே நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல என அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு தலைமை வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையடுத்து, அவரது அணி சார்பிலும் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக (அம்மா) அணி சார்பில் ஏற்கெனவே எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.

இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் வரும் நாளை திங்கள்கிழமை (ஏப்.24) முதல் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இரு அணிகளைச் சேர்ந்த பேச்சுவார்த்தைக் குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்துவார்கள்.

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு ஏரியை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக எம்எல்ஏ ஒற்றுமையாக உள்ளனர். ஆட்சி தொடரவே எம்எல்ஏக்கள் விரும்புகின்றனர்.

நாளை திங்கள்கிழமை (ஏப் 24) ஓ.பி.எஸ் அணியிருடன் பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாகவும், வந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம். வருவார்கள் என்று எதிர்ப்பார்த்துள்ளோம் என்று கூறினார்.

மேலும், கட்சியின் நலன் கருதியும், ஆட்சியை காப்பாற்றவும், இரட்டை இலைக்காக தன்னிடம் உள்ள நிதித்துறை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இழக்கவும் தயாராக உள்ளேன் என்று ஜெயக்குமார் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com