சென்னை: அதிமுக (புரட்சித்தலைவி அம்மா), அதிமுக (அம்மா) ஆகிய இரு அணிகள் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நாளை காலை 11 மணியளவில் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இரு அணிகளைச் சேர்ந்த பேச்சுவார்த்தைக் குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்துவார்கள். நாளை நடைபெறும் பேச்சுவார்தையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.