சென்னை: முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில், தில்லி, ஜந்தர் மந்தரில் 41 நாள்களாக பல்வேறு நூதனமான போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை (ஏப்.,25) காலை சென்னை சென்டரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விவசாயிகளுக்கு நல்ல முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
இந்நிலையில், தில்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்து சேர்ந்த விவசாயிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே மத்திய அரசு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்