நெடுவாசலில் தூக்குக் கயிறுடன் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் திங்கள்கிழமை கழுத்தில் தூக்குக் கயிறுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கழுத்தில் தூக்குக் கயிறுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
கழுத்தில் தூக்குக் கயிறுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் திங்கள்கிழமை கழுத்தில் தூக்குக் கயிறுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. திட்டம் செயல்படுத்தப்படாது என்ற மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதியளிப்பை ஏற்று போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே கடந்த 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். அதில், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, 13-வது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, போராட்டத்திற்காக போடப்பட்டுள்ள பந்தலில் கயிற்றைக் கட்டி, அதை கழுத்தில் மாட்டி தூக்கிட்டுக்கொள்வது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், நெடுவாசல், அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com