அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்த ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்த ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்குகிறது.
அதன்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1 -ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 1 -ஆம் தேதி முதல் நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
உயர்வு எவ்வளவு கிடைக்கும்? இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3,080 வரையிலும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ.1,540 வரையிலும் ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்.
இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்துக்கு நிலுவையாகவும், மே மாதம் முதல் ஊதியத்துடனும் வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர்.
இதன் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.986.77 கோடியாக இருக்கும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com