டிடிவி. தினகரனை விசாரணைக்காக தில்லி போலீசார் சென்னை அழைத்து வந்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து, அவரை சென்னை, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் டிடிவி. தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவை விசாரணைக்காக தில்லி போலீசார் இன்று சென்னை அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து தினகரனை அவரது வீடு, அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.