இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அரசியல் சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) நடைபெறுகிறது.

அரசியல் சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
திமுகவில் மொத்தம் உள்ள 65 மாவட்டச் செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதிமுக இரு அணிகளும் இணைய உள்ள நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாவும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி, மாவட்டவாரியாக போராட்டம் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com