கிராம கோயில்கள் வளர்ச்சி பெற்றால்தான் ஆன்மிகம் முன்னேற்றமடையும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

கிராம கோயில்கள் வளர்ச்சி பெற்றால்தான் ஆன்மிகம் முன்னேற்றம் அடையும் என சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூர்: கிராம கோயில்கள் வளர்ச்சி பெற்றால்தான் ஆன்மிகம் முன்னேற்றம் அடையும் என சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்ட் சார்பில் "அற்புத ராமானுஜர்' என்ற தலைப்பில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் கண்காட்சியைத் திறந்துவைத்து ஸ்ரீசங்கர விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:

ஆன்மிகம் வளர கிராமங்களில் உள்ள கோயில்கள் வளர்ச்சி பெற வேண்டும். கிராம கோயில்கள் வளர்ச்சி பெற்றால் தான் ஆன்மிகம் முன்னேற்றம் அடையும்.

கிராம கோயில்கள் வளர்ச்சி பெற சன்மானம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் பக்தி பெருகும். பக்தி தான் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com