விவசாயிகள் பிரச்னைக்காகவே திமுகவுடன் அணி சேர்ந்தோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இதை உடனடியாக தமிழக அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகவே திமுகவுடன் முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோம். தேர்தல் வரும் போது திமுகவுடன் கூட்டணி சேர்வது குறித்து பரிசீலனை செய்வோம் என்றார்.