பி.இ. கலந்தாய்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

017-18 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு நாளை திங்கள்கிழமை (மே 1) முதல் ஆன்லைலைனில்
பி.இ. கலந்தாய்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை:  2017-18 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு நாளை திங்கள்கிழமை (மே 1) முதல் ஆன்லைலைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசித் தேதியாகும். மே 31 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதியாகும்

அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் (பி.இ.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

2017-18 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் பொதுப் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும். ஜூன் 22ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com