எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அதிமுக அம்மா அணி வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்துவது குறித்தும், கட்சிப் பணிகள் தொடர்பாகவும் முதல்வரும், கட்சியின் தலைமை நிலைமைச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.