மருத்துவ கலந்தாய்வு நடத்தவேண்டிய கால நெருக்கடியில் உள்ளோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் குறித்து தில்லியிலிருந்து சென்னை திரும்பிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நீட் விவகாரத்தில் தமிழக அரசுதான் அதிக அழுத்தம் அளித்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இந்த ஆண்டு விலக்கு கோரியுள்ளோம். மருத்துவ கலந்தாய்வு நடத்தவேண்டிய கால நெருக்கடியில் உள்ளோம். அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காகத்தான் போராடி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.