சென்னை: தேடப்படும் நபராக உள்துறை அமைச்சகம் அறிவித்ததை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, லுக் அவுட் நோட்டீஸ் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு அறிவிப்பதாக அரசு வழக்குரைஞர் கூறியதை அடுத்து வழக்கு 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை, பாஸ்போர்ட் சட்டத்தின்படி தேடப்படும் நபராக அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம்.