புது தில்லி: தேடப்படும் நபராக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அறிவித்து உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும், கார்த்தி சிதம்பரம் குறித்து 'லுக் அவுட் சர்குலர்' அனுப்பியுள்ளது.
ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெற்றுத் தந்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.