திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 680 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 680 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், சென்னை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 3 பேர் செல்போன் சார்ஜரில் 160 கிராம் நகையை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

இதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தின் பயணிகளிடம் நடத்திய பரிசோதனையில் புதுக்கோட்டை, திருவாரூர், திருப்பத்தூர் மற்றும் திருச்சியை சேர்ந்த 4 பேர் 520 கிராம் தங்கத்தை மறைத்துவைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com