சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை வழக்கத்தை விட 2 செ.மீ. கூடுதலாகப் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை தென்மேற்குப் பருவ மழை 2 செ.மீ. அதிகமாகப் பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.