கருணாநிதியின் மெளனத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடப்பது அரசியலே இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் நடைபெறவுள்ள திருமண விழாவையொட்டி மு.க.அழகிரி புதன்கிழமை வருகை தந்தார்.
வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்ட மு.க .அழகிரியை செய்தியாளர்கள் சந்திக்க முயன்றனர். அப்போது, எதுவும் சொல்ல விரும்பவில்லை என்பதை தெரிவித்த அவர், கருணாநிதியின் மௌனத்துக்குப் பிறகு தமிழகத்தில் அரசியலே இல்லை என்றார்.