குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை தில்லி செல்கிறார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்களும், எம்.பி.க்களும் பங்கேற்கவுள்ளனர். குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றார். இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.