சுதந்திர தினத்துக்குள் (ஆக. 15) அதிமுக அணிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், அமைச்சர் ஜெயக்குமாரிடம் அணிகள் இணைப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த டி.ஜெயக்குமார், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் சுதந்திர தினத்துக்குள் கண்டிப்பாக இணையும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.