சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுகள் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து, இன்று வரை நடத்தப்பட்டது.
அந்த நேர்முகத் தேர்வுகளுக்கான முடிவுகள் தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டடுள்ளது.
இதில் சென்னையைச் சேர்ந்த காயத்ரி முதலிடம் பிடித்துள்ளார். மணிராஜ் இரண்டாமிடமும், தனப்ரியா மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.