டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. 
டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுகள்  கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து, இன்று வரை நடத்தப்பட்டது.

அந்த நேர்முகத் தேர்வுகளுக்கான முடிவுகள் தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டடுள்ளது.  

இதில் சென்னையைச் சேர்ந்த காயத்ரி முதலிடம் பிடித்துள்ளார். மணிராஜ் இரண்டாமிடமும், தனப்ரியா மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com