முரசொலி பவள விழா: ரஜினிகாந்த் பங்கேற்பு

முரசொலி பவள விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராக கலந்துகொண்டு முழுமையாக நிகழ்ச்சியில் பங்கேற்றார். எனினும் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்
முரசொலி பவள விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் நடிகர் கமல்ஹாசன்.
முரசொலி பவள விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் நடிகர் கமல்ஹாசன்.

முரசொலி பவள விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராக கலந்துகொண்டு முழுமையாக நிகழ்ச்சியில் பங்கேற்றார். எனினும் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.
முரசொலியின் பவள விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பார் எனக் கூறப்பட்டிருந்தது. கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் ரஜினி பங்கேற்றார். பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து நடிகர் கமல்ஹாசன், பத்திரிகையாளர்கள் பேசும்போது கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
அதே சமயம், விழா நினைவுப் பரிசு பெறுவதற்காக விழாக் குழுவினர் அழைத்தபோது, மேடை ஏறிச் சென்றார். அவருக்கு திமுகவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலினும், நடிகர் கமல்ஹாசனும் நினைவுப் பரிசு வழங்கினர். அதைப் பெற்றுக் கொண்டு மீண்டும் மேடையில் இருந்து இறங்கி வந்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்தார் ரஜினி.
பின்னர், முரசொலி பவளவிழாவுக்காக மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டதாக செய்தியாளர்களிடம் ரஜினி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com