உயர் மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றாவிட்டால் ரூ.2 கோடி செலுத்த வேண்டும்: இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் படித்து முடித்த உடன் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றாவிட்டால் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
உயர் மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றாவிட்டால் ரூ.2 கோடி செலுத்த வேண்டும்: இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் படித்து முடித்த உடன் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றாவிட்டால் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
டி.எம்., எம்.சிஎச். ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கலந்தாய்வை மத்திய சுகாதார சேவைகளின் இயக்குநர் ஜெனரல் இயக்ககம் நடத்துகிறது.
ரூ.2 கோடிக்கு உத்தரவாதம்: நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில் 192 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இந்தப் படிப்புகளில் சேரும் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் அல்லாதோர் அனைவரும் ரூ.2 கோடிக்கான உத்தரவாதத்தை படிப்பில் சேர்ந்த 7 நாள்களுக்குள் அளிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேரும் பட்சத்தில், படித்து முடித்த உடன் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் தங்கள் சேவைக் காலம் முழுவதும் பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றும் பட்சத்தில் இந்தத் தொகைக்கான உத்தரவாதம் உள்ளிட்டவை தானாகவே செயலிழந்துவிடும்.
அரசு மருத்துவர்கள் அல்லாதோரும் ரூ.2 கோடிக்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். அவர்கள் படிப்பை முடித்து 10 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றத் தவறினால் ரூ.2 கோடி செலுத்த வேண்டும். படிப்பைப் பாதியிலேயே கைவிட்டாலும் ரூ.2 கோடி மற்றும் அதுவரை வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் குறிப்பிட்ட மாணவரின் அசல் சான்றிதழ்கள் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. பணத்தைச் செலுத்திய பிறகே, அசல் சான்றிதழைப் பெற முடியும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ரூ.50 லட்சத்திலிருந்து அதிகரிப்பு: கடந்த ஆண்டு மாநில அரசே கலந்தாய்வை நடத்தியது. அப்போது அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டில் இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் பிணைக் கட்டணம் ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பொதுப் பிரிவில் இடங்களைப் பெற்றோருக்கு கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த ஆண்டு இடங்களைப் பெறும் அனைவருக்கும் ரூ.2 கோடி என்பது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றத் தவறினால் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று தகவல் தொகுப்பு ஏட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு மத்திய அரசு கலந்தாய்வை நடத்துவதால் பிணைத் தொகை குறித்த சட்டப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. கலந்தாய்வைத் தொடர்ந்து அதற்கான நடைமுறைகள் குறித்து தெரிய வரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com