குடும்ப அட்டைகளில் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள், உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் குறைதீர் கூட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் 17 மண்டலப் பகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண அந்தந்த மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்திலேயே குறைதீர் கூட்ட முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 12) நடைபெறவுள்ளன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது பற்றியும் குறைகள் ஏதும் இருந்தால் நுகர்வோர் அவற்றைத் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.