சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் தங்கத்தால் செங்கோட்டை உருவத்தை வடிவமைத்துள்ளார்.
சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவைச் சேர்ந்த ஜெயபால் பத்தர் மகன் ஜே.முத்துக்குமரன் (36). 9}ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், தனது தந்தையுடன் இணைந்து நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். மிகவும் குறைந்த அளவு தங்கத்தில் சிறிய பொருள்களையும் ஆர்வமுடன் வடிவமைத்து வருகிறார். 70}ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தற்போது 2 கிராம் 150 மில்லி தங்கத்தில் தில்லி செங்கோட்டையை வடிவமைத்துள்ளார். 1 செ.மீ. உயரம், 1.5 செ.மீ. அகலமும் கொண்ட இந்த செங்கோட்டையை 5 நாள்களில் வடிவமைத்துள்ளார்.
இவர் ஏற்கெனவே, நடராஜர் கோயில் பொற்சபை, தாஜ்மஹால் உள்ளிட்ட பலவகை உருவங்களை குறைந்த அளவு தங்கத்தால் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.