நெடுவாசலில் பெண்கள் கையில் சூடம் ஏற்றி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை அப்பகுதி பெண்கள் கையில் சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுவாசலில் கையில் சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
நெடுவாசலில் கையில் சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை அப்பகுதி பெண்கள் கையில் சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து, கடந்த ஏப்.12}ஆம் தேதி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து, பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 123}ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் , திட்டத்தை ரத்து செய்யவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மண்டியிட்டவாறு, கையில் சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com