குமரி அருகே நடுக் கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

கன்னியாகுமரி அருகே எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸôர் சனிக்கிழமை மீட்டனர்.

கன்னியாகுமரி அருகே எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸôர் சனிக்கிழமை மீட்டனர்.

கன்னியாகுமரியை அடுத்த கீழமணக்குடியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (37). இவருக்குச் சொந்தமான வள்ளத்தில் இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மரியஜாண் (60), போஸ்கோ (63), சூசை (45), பிராங்களின் (52) ஆகிய 5 பேரும் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கீழமணக்குடியில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 3 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வள்ளத்தில் எஞ்சின் பழுதடைந்தது. கடலில் காற்று அதிகமாக இருந்ததால் மீனவர்கள் 3 மணிநேரமாக கடலுக்குள் தத்தளித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் நவீன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர்கள் கோபி, மணிகண்டன், மகாலிங்கம் ஆகியோர் ரோந்துப் படகில் சென்று மீனவர்களை மீட்டு சின்னமுட்டம் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com